Wednesday, August 31, 2016

6174




அது கணிக்கவே முடியாத ஒரு யுகம். லெமூரியா கண்டத்தின் ஒன்பது அடி உயர மனிதர்கள் சிலர் அங்கே நிற்கின்றனர். அவர்களின் முன்பு லெமூரியாவின் சக்தி பீடமான சிறிய பிரமிட் ஒன்று உள்ளது. பின்னால் தோன்றப்போகும் மோசமான மனித இனத்தின் கையில் அது கிடைக்கக்கூடாது என்பதற்காக அதை இரு பகுதியாக வெட்டி உலகின் இருவேறு பகுதிகளில் மறைத்துவிட்டு லெமூரியன்கள் அழிந்துவிடுகின்றனர்.

தற்காலத்தில் அந்த லெமூரியன் பிரமிடை தோடி பல குழுக்கள் அழைகின்றன. அதை அடைய ஏகப்பட்ட புதிர்களை அவிழ்க்கவேண்டியுள்ளது. கடைசியில் அந்த பிரமிட் என்ன ஆனது என்று இந்த 6174 என்ற கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு டாவின்ஸி கோட் நாவலும் திரைப்படமும் பிடிக்குமெனில் நிச்சயம் இந்த நாவலும் பிடிக்கும். சரி இந்த நாவலுக்கு ஏன் 6174 னு பெயர் வச்சாங்க. அதுக்கான காரணம் தெரியும்போது நீங்க வாய்பிளப்பது நிச்சயம். கணிதத்தில் இந்த 6174 நம்பரை ஒரு கருங்குழினு (Black hole) சொல்லப்படுவது ஏன்? விடை புக்கில்.

லெமூரியாவில் ஆரம்பிக்கும் கதை அமெரிக்கா, கொரியா, ரஷ்யா, சென்னை,கேரளா,காஞ்சிபுரம், மஹாராஷ்ட்ரா,ஒரிசா, பர்மானு கடைசில பெர்முடா முக்கோணத்துல வந்து முடியும்.
இந்த புக்க ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியபோது ஆரம்ப இருபது பக்கங்களைகூட தாண்டமுடியல அவ்ளோ குழப்பமா இருந்தது. மூடிவச்சிட்டேன். நேற்று மறுபடிம் எடுத்து புரட்டினேன் இருபது பக்கங்களுக்கு பிறகு புக்கு என்னை புரட்டிபோட்டுவிட்டது அவ்ளோ வேகம். இந்த கதைய எழுதிய க.சுதாகருக்கு இதுதான் முதல் கதை.
வம்சி பதிப்பகம். விலை ரூபாய்.300.

0 Comments:

Post a Comment