Tuesday, March 25, 2014

The Chesar ( south korea) 2008

ஜாங் வூ அப்புடினு தொன் கொரியால ஒரு மாமா இருந்தாரு. என்னடா மாமாங்குறேனு பாக்குறீங்களா என்ன பன்றது அவர் பன்ற தொழில் அப்படி. ரெண்டாம் நம்பர் பிஸ்னஸ் பன்னுகிற நம்பர் ஒன் ஆளு. கொஞ்ச நாளாவே அவரிடம் இருந்த இரு பெண்களை காணவில்லை.  இந்நிலையில் 4885 என்ற நம்பரிலிருந்து ஒருவன் அழைத்து தன் சொல்லுமிடத்திற்கு ஒரு பெண்ணை அனுப்பும்படி கூறுகிறான்.  ஜாங் வூவும் சரினு மி ஜின் என்ற பெண்ணை அனுப்புகிறார்.  பின்னர் இந்த பொண்ணும் திரும்பிவருவதில்லை. என்னடா இது என அவர் தன் ரிஜிஸ்டரை எடுத்துப்பார்க்க அதில் தொலைந்த மூன்று பெண்களும் 4885 என்ற நம்பரிலிருந்தே அழைக்கப்பட்டிருப்பதை காண்கிறார்.

அந்த நம்பரை தேடிச்செல்கையில் வழியில் ஒருவன்  ஜாங் வூவின் காரை இடித்து விடுகிறான். அவனிடம்  சண்டையிடும் ஜாங் வூ அவன் போன் நம்பரை கேட்கிறார். தரமறுக்கும் அவன் மேல் சந்தேகம் கொண்டு 4885க்கு அழைக்கிறார். அவன் செல்போன் ஒலிக்க  வண்டியை விட்டு இறங்கி ஓடுகிறான்.  அவனை விரட்டிப்பிடிக்கையில் இருவரும் போலிசிடம்  மாட்டுகின்றனர். தனது மூன்று பெண்களை அழைத்துச்சென்று வேறு இடத்தில் விற்று விட்டதாக அவன்மேல் குற்றம்சாட்டுகிறார் ஜாங் வூ. விசாரிக்கும் போலிசிடம் தான் மூன்று பெண்களையும் விற்கவில்லை எனவும் கொன்று விட்டதாகவும் மேலும் இதுவரை பன்னிரென்டு பெண்களை கொன்றிருப்பதாகவும் அவன் கூறுகிறான்.

எங்கு தேடியும் அவன் கொன்றதாக கூறிய பெண்களின் சடலம் கிடைக்காததால்  போலிஸ் அவனை விட்டுவிடுகிறது. இதனை நம்பாமல் அவனை பின் தொடர்கிறான் ஜாங் வூ. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை சேஸர் என்ற இந்த கொரிய திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதுவரை வந்த எல்லா சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களிலும் கொலைகாரன் கட்டக்கடைசியில் தான் தன் முகத்தை காட்டுவான்.  அதை வைத்துதான் பார்வையாளர்களை பரபரப்பாக பல்லைகடிக்க வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதற்கு நேர் எதிராக ஆரம்பத்திலேயே கொலைகாரன் போலிசிடமே மாட்டிக் கொள்வான் இருந்தாலும் படபடப்பாய் நம்மை பார்க்க வைப்பது இதன் நேர்த்தியான திரைக்கதைதான். இன்றைய காலகட்டத்தில் ஹாலிவுட்டை விட தரத்தில் சிறந்த படங்களை கொடுப்பது கொரியாதான்.  இருந்தாலும் ஹாலிவுட் அளவிற்கு யாராலும் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் படம் எடுக்க முடியாவிட்டாலும் நல்ல திரைப்படத்திற்கு பணம் ஒரு பொருட்டல்ல என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.


                                                                                                 

Friday, March 14, 2014

கரீபியன் கடற்கொள்ளையர்-இறந்தவனின் இதயம்

போர்ட் ராயல் துறைமுகத்தின் ஒரு மழைக்கால பகல்வேலையில் மழைத்துளிகளுக்கு போட்டியாய் அணிவகுத்து வருகின்றனர் பிரிட்டிஸ் கடற்படை வீரர்கள். அவர்களின் தலைவன் லார்ட் பெக்கட் பிரபு. இவனே போர்ட் ராயலின் புதிய நிர்வாகி. திருமணக்கோலத்தில் இருக்கும் வில் டானரையும் எலிசபெத்தையும் கைது செய்து , ஜாக்கிற்கு உதவிய குற்றத்திற்காக தூக்கிலிடும் வாரண்டுடன் வருகிறார். வில் டானரை மட்டும் விடுவித்து ஜாக்கின் திசைமானியை கொண்டுவந்தால் எலிசபெத்தை விட்டுவிடுவதாக கூறி வில்லை அணுப்பி விடுகிறார்.

அது ஒரு சிறைச்சாலை. பினந்திண்ணி காக்கைகளும் கழுகுகளும் கூண்டில் அடைக்கப்பட்ட உயிருள்ள கைதிகளை கொத்தித்திண்ணும் கொடுமையான இடம்.  அங்கு இறந்த கைதிகளின் சவப்பெட்டிகளை தூக்கி கடலில் எறிகின்றனர் இரு எம கிங்கிகர்கள். கடலில் விழுந்த ஒரு சவப்பெட்டியை கொத்திக்கொண்டிருக்கும் காகத்தை உள்ளிருந்து ஒரு துப்பாக்கி சுடுகிறது.  பெட்டியின் உள்ளிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு உள்ளிருக்கும் இறந்த பிணத்தின் கையை பிய்த்து அதை துடுப்பாய் பயன்படுத்தி கடலில் செல்லும் அந்த உருவம் ஜாக் ஸ்பேரோவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும். அவன் அந்த சிறையிலிருந்து ஒரு சாவியின் வரைபடத்தை  கைப்பற்றி வருகிறான்.  அந்த சாவியின் மூலம் டேவி ஜோன்சின் இதயம் இருக்கும் பெட்டகத்தை திறக்கலாம். அதை வைத்து நூற்றாண்டு கடனை அடைப்பதே ஜாக்கின் திட்டம்.

பிளாக்பியர்ல் கப்பலை கிழக்கு இந்திய கம்பெனி மூழ்கடித்த போது அதனை மீட்டுக் ஜாக்கிடம் கொடுத்தவன் டேவி ஜோன்ஸ். அதன் பிரதிபலனாக ஜாக் பதிமூன்று ஆண்டுகள் கேப்டனாகவும் பின்னர் நூறு ஆண்டுகள் ஃபிளையிங் டச்மேன் கப்பலில் மாலுமியாகவும் இருக்க வேண்டும் என்பதே ஜாக் ஸ்பேரோவின் வட்டியில்லா கடன்.

யார் இந்த டேவி ஜோன்ஸ்!?

ஏழு கடல்களிலும் ஈடுஇணையில்லாத வலிமையும் வேகமும் கொண்ட கப்பலான ஃபிளையிங் டச்மேனின் கேப்டன்தான் டேவி ஜோன்ஸ்.  இந்த கப்பலுக்கு கேப்டனாக இருப்பவரின் இதயத்தை எடுத்து ஒரு பெட்டகத்தில் வைத்துவிட வேண்டும் இதுதான் இந்த கப்பலின் விதி. அந்த இதயத்தை யார் கொல்கிறாரோ அவரே அடுத்த கேப்டன். அவருக்கும் இதயம் இருக்காது. டேவி ஜோன்சின் பார்ட் டைம் வேலை கடலில் இறந்தவர்களை மறு உலகிற்கு அணுப்பிவைப்பது. இவனது கட்டுப்பாட்டில் உள்ள க்ராக்கன் என்ற படு பயங்கர கடல்மிருகத்தை வைத்து பல கப்பல்களை கபாலிகரம் செய்வதும் இவன் வேலைதான். இவனுக்கு ஒரு காதலியும் உண்டு மேலும் பத்து வருடங்களுக்கு ஒருமுறை தான் கரைக்கே வர முடியும். ஃபிளையிங் டச்மேனில் உள்ள மாலுமிகள் அணைவரும் நூறு ஆண்டுகளுக்கு அடிமையாய் இருப்பவர்கள். அவர்களுள் ஒருவர் வில் டானரின் தந்தையான பூஸ்ட்ரப் டானர். டேவி ஜோன்ஸின் ஆக்டோபஸ் முகமும் கொடுக்குக் கையும்  உருவாக்கிய விதம் செம, கற்பனையின் உச்சம் எனலாம்.
ஜாக் ஸ்பேரோவின் திசைமாணிக்கு ஒரு விசேச குணம் உண்டு. அது வட திசையை காட்டாது ஆனால் நாம் செல்லவேண்டும் என நினைக்கும் திசையை காட்டக்கூடியது. இதைக்கொண்டு  டேவி ஜோன்ஸின் இதயம் இருக்கும் இடத்தை அறிந்து அதை கைப்பற்றுவதன் மூலம் ஃபிளையிங் டச்மேனை அடையலாம். அதை வைத்து மொத்த கடற்கொள்ளையர்களையும் அழிப்பதே லார்ட் பெக்கெட் பிரபுவின் திட்டம்.

எலிசபெத்தை காப்பாற்ற ஜாக்கைதேடி வரும் வில் டானரிடம்  வரைபடத்தில் இருக்கும் சாவியை எடுத்து வந்தால் திசைமாணியை தருவதாக சொல்கிறான் ஜாக். சாவியை தேடி ஃபிளையிங் டச்மேன் கப்பலிற்கு செல்கிறான் வில். அங்கு தன் தந்தையை சந்திக்கிறான்.  டேவி ஜோன்ஸ் அசந்த நேரத்தில் அவனிடமிருந்து சாவியை திருடிச் செல்கிறான்.  அதை பயன்படுத்தி தன் தந்தையை விடுவிப்பதே வில் டானரின் திட்டம்.

கடைசியில் டேவி ஜோன்ஸின் இதயம் யாருக்கு கிடைத்தது என்பதே பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் - டெட்மேன்'ஸ் ஜெஸ்ட் திரைப்படத்தின் கதை. படு அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டு ஜாக் செய்யும் சேட்டைகள் பட்டைய கெளப்பும். இதில் முக்கியமான ஒன்று ஹன்ஸ் ஸிம்மரின் இசை. ஒற்றை வயலின் மட்டுமே தனி ஆவர்த்தனம் புரியும்.

                                                                                                             
                                                                                                         
                

Wednesday, March 12, 2014

வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ : சீட்டிக் பேல்

இந்த உலகில் உள்ள விலங்குகளுள் மிகவும் பயங்கரமானதும் தலையாயதுமான ஒரு மிருகம் மனிதன்.  அவன் அழித்தொழிக்காத உயிரினமே இல்லை தன் இனம் உட்பட. அப்படிப்பட்ட நாகரீக மனிதன் ஒரு பழங்குடி இனத்தையே அழித்த கதைதான் இந்த வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ.

இது தைவானில் 1930ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தைப்போல் படம் எடுக்கப்பட்ட கதையும் சுவாரஸ்யமானது முதலில் அதைப்பார்ப்போம்.

இந்த கதை ஆரம்பமானது 1996ல். வெய் டி ஷாங் அப்புடிங்குற ஒரு தைவான் இயக்குனர் Wushe Incident எனப்படும்  சம்பவத்தை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்ட ஒரு காமிக் புக்கை படித்தார். அது பிடித்துப்போகவே அதை படமாய் எடுக்க முடிவு செய்து இரண்டு வருடம் உட்கார்ந்து நீண்ட திரைக்கதை ஒன்றை எழுதினார்.  இந்த திரைக்கதையை எடுத்துக்கொண்டு ஒரு தயாரிப்பாளரை அணுகி  படத்தைப்பற்றிய ஒரு டிரைலர் வீடியோ எடுக்க இரண்டரை மில்லியன் அமெரிக்க டாலர் கேட்டார். முழு படத்தின் பட்ஜெட் ஏழு மில்லியன்.  அரண்டுபோன தயாரிப்பாளர் புத்தர் கோவிலில் மந்திரிச்ச டாலரை வாங்கி கொடுத்து இயக்குனரை அணுப்பிவிட்டார். வேறு வழியில்லாமல் தனது மனைவியின் நகை நட்டு எல்லாவற்றையும் விற்று அந்த டிரைலரை எடுத்து பல நிறுவனங்களிடம் காட்டினார். பெரிய பட்ஜெட் காரணமாக எந்த நிறுவனமும்  கண்டுகொள்ளாமல் நான் எழுதும் பதிவுகளைப் போன்றே சீந்துவாரின்றி கிடந்தது அந்த டிரைலர்.

நண்பர் ஒருவர் நீ முதலில் சின்ன ஆனிய புடுங்கி காட்டு அப்புறம் பெரிய ஆனி புடுங்கலாம் என ஐடியா கொடுக்க ஷாங்கும் 2008ல் Cap no.7 என்ற சிறிய ஆனியை சாரி  லோ பட்ஜெட் காமெடி படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் செம ஹிட்டடிக்க வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போவை தயாரிக்க சிலர் முன் வந்தனர். இம்முறை ஷாங் கேட்ட பட்ஜெட் இருபத்தி ஐந்து மில்லியன். இது நம்ம எந்திரனை விட கொஞ்சம் கம்மிதான்.  படம் முழுவதும் காடு, மலை, மழைதான்.  இரு பாகமான இந்த படத்தை மொத்தம் பத்தே மாதங்களில் எடுத்துவிட்டார். நம்ம ஊரில் வருடக்கணக்கில் படம் எடுக்கும் இயக்குனர்களை கட்டிவைத்து இந்த படத்தை போட்டுக்காட்ட வேண்டும். தைவானில் இது வரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். அதேபோல் வசூலையும் அள்ளியது கூடவே பல உலக விருதுகளையும். 2011ல் வெளிவந்த ஒரு சிறந்த காவியமான வாரியர்ஸ் ஆஃப் த ரெய்ன்போ படத்தின் கதை அடுத்த பதிவில்...

                                                                                                                           

Sunday, March 2, 2014

பிளாக்பியர்லின் சாபம்


கி.பி.15ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த ஹெர்னன் கார்டஸ் டி மென்ராய் என்பவர் தலைமையில் ஸ்பானிஷ் படைகள் மெக்ஸிகொவை தாக்கி, அங்கிருந்த அஸ்டக் இன மக்களை கொன்று குவித்து அவர்களின் தங்கங்களை கொள்ளையடித்தனர்.  பலரை பலிகொண்ட காரணத்தால் இந்த தங்கம் சபிக்கப்பட்டது. எனவே 882 தங்கபதக்கங்கள் அடங்கிய அந்த பொக்கிஷத்தை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி அதை கல்லறை தீவில் வைத்துவிட்டு திரும்பிகூட பார்க்காமல் சென்றுவிட்டார் கார்டஸ் டி மென்ராய்.

பல ஆண்டுகளுக்குப்பின்...

கெசுமருந்து அடிக்கும் கார்ப்பரேஷன் வண்டிக்கு பின்னால் செல்லும் வெண்புகையை போன்ற பனி சூழ்ந்த முன்பனிக்காலத்தின் காலை வேலையில் அட்லாண்டிக் கடலில் அந்த பிரிட்டிஷ் கப்பற்படை கப்பல் அலைகளை முத்தமிட்டவாரே மெதுவாக சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பலில் இருப்பவர்கள் கவர்னர் ஸ்வான், அவரது பத்துவயது மகள் எலிசபெத், லெப்டினன்ட் ஜேம்ஸ் நாரிங்டன் மற்றும் மாலுமி கிப்ஸ். வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஒரு கப்பலை பார்கின்றனர். அதிலிருந்து ஒரு சிறுவன் மீட்கப்பட்டு அவன் பெயர் வில் டானர் என்பதை மட்டும் சொல்லிவிட்டு மயக்கமடைகிறான். அவன் கழுத்தில் அணிந்திருக்கும் ஒரு தங்கபதக்கத்தை எடுத்து மறைத்து விடுகிறால் சிறுமி எலிசபெத்.
எட்டு ஆண்டுகளுக்குப்பின் போர்ட் ராயல் துறைமுகத்தின் அருகே ஒரு சிறியபடகு மூழ்கிகொண்டிருக்கும் நிலையில் வருகிறது. அதன் பாய்மரத்தின் உச்சியில் ஏறிநின்று கரையை பார்கிறது ஓர் உருவம். படகு முழுகவும், துறைமுகத்தின் முகப்பில் அவன் காலை எடுத்து வைக்கவும் சரியாய் இருக்கிறது. யார் அவன்!?  அவன் கொள்ளையர்களால் தேடப்படும் கொள்ளைக்காரன். கடற்படையை கலங்கடிக்கும் கள்வன். ஏலு கடல்களின் இளவரன். அவன் பெயர் ஜாக் ஸ்பேரோ ( கேப்டன்னு சொல்லுங்க) ஆங் கேப்டன் ஜாக் ஸ்பேரோ. இப்படி ஒரு அறிமுக காட்சியை இதுவரை நான் எந்த ஒரு ஹீரோவிற்கும் எந்த படத்திலும் பார்த்ததில்லை. இந்த சீரிஸின் அணைத்து படங்களிலும் எனக்கு மிக பிடித்தமான காட்சியென்றால் அது ஜாக் ஸ்பேரோவின் அறிமுக காட்சிதான். இந்நிலையில் லெப்டினன்ட் நாரிங்டன் தளபதியாக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளும் எலிசபெத் எதிர்பாராதவிதமாக கோட்டை உச்சியிலிருந்து கடலில் விழுகிறாள். அவள் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கம் நீரில் நனைந்து கடலில் ஒரு அலையை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த பதக்கம் இருக்குமிடம் பிளாக்பியர்ல் கப்பலுக்கு தொரிந்துவிடுகிறது. எலிசபெத்தை காப்பாற்றும் ஜாக் ஒரு கொள்ளையன் என தெரிந்துவிடுவதால் அவன் காவலர்களிடமிருந்து தப்பிவிடுகிறான். பின்னர் அவனை பிடித்து கொடுக்கிறான் தற்போது கொல்லனாக இருக்கும் வில் டானர். அன்று இரவு போர்ட் ராயல் துறைமுகத்தின் இருளை மேலும் கருமையாக்க வருகிறது பிளாக்பியர்ல். அதில் வரும் கொள்ளையர்கள் நகரையே சூரையாடுகின்றனர். அவர்கள் தேடிவந்த பதக்கம் எலிசபெத்திடம் இருப்பதாலும் மேலும் அவள் பெயர் எலிசபெத் டானர் என்றதாலும் அவளை கடத்திச்செல்கின்றனர். அங்கு பிளாக்பியர்ல் கப்பலின் படு பயங்கர கேப்டனான ஹெக்டர் பர்போசாவை சந்திக்கிறாள் எலிசபெத். அவளிடம் தன் கதையை சொல்கிறான் பர்போசா.

சில வருடங்களுக்கு முன்...

அஸ்டக் பொக்கிஷத்தை அடைவதற்காக கல்லரைத்தீவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது பிளாக்பியர்ல். அதன் கேப்டனான ஜாக் ஸ்பேரோவை வஞ்சகமாய் ஏமாற்றி ஒரு தீவில் இறக்கிவிட்டு கப்பலை எடுத்துச்செல்கிறான் பர்போசா. இதற்கு எதிர்ப்பு தொரிவிக்கும் ஒரே நபர் வில் டானரின் தந்தையான வில்லியம் பூஸ்ட்ரப் டானர். இதன் பின்னர் அஸ்டக் தங்கத்தை கொள்ளையடித்த பிறகுதான் தெரிகிறது பசி,தாகம் அடங்காத சாவே வராத நிலவொளியில் பேய்யாய் மாறும் சாபத்திற்கு ஆளானது. இதிலிருந்து மீண்டுவர கொள்ளையடித்த 882 பதக்கங்களையும் அவர்களின் ரத்தத்துடன் கல்லரைத்தீவில் வைக்க வேண்டும். இதற்காகவே எலிசபெத்தை கடத்திச்செல்கிறான்.

இந்நிலையில் எலிசபெத்தை காதலிக்கும் வில் டானர், ஜாக்கை விடுவித்து எலிசபெத்தை மீட்க உதவி கோருகிறான்.  இவனே வில்லியம் டானரின் உண்மையான வாரிசு என்பதையும் சாபம் தீர இவனது ரத்தம் தேவை என்பதையும் அறிந்த ஜாக், வில்லிற்கு உதவ சம்மதிக்கிறான்.
இதன்பின் எலிசபெத் மீட்கப்பட்டாளா? பர்போசாவின் சாபம் தீர்ந்ததா? ஜாக், பர்போசாவை பழி தீர்த்தானா? ஜாக்கிற்கு பிளாக்பியர்ல் கப்பல் கிடைத்ததா? இதற்கெல்லாம் விடை பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் : குருஸ் ஆஃப் த பிளாக்பியர்ல் படத்தில் உள்ளது.

Post credits என்ற ஒரு மிகச்சிறிய காட்சி ஹாலிவுட்டின் சில படங்களின் கட்டக்கடைசியில் வரும். படத்தில் வேலை பார்த்தவர் சூட்டிங்கை வேடிக்கை பார்த்தவரென்று ஒரு இரண்டாயிரம் பெயர்களை போடுவார்களே அதன் பின்னர் வரும் பத்து வினாடி காட்சிதான் அது. ( அவஞ்சர்ஸ் ஹீரோக்களின் அணைத்து படங்களிலும் இது உண்டு) அதைப்போல் இந்த பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்  படங்களிலும் உண்டு அதையும் காத்திருந்து பாருங்கள்.