Wednesday, August 31, 2016

For a few dollars more



கலோனல் டக்லஸ் என்பர் ராணுவத்தில் வேலை செய்து தற்போது ஒரு வெகுமதி வேட்டையராக இருப்பவர். வைல்டு வெஸ்டிலேயே இவரளவுக்கு குறிவைத்து சுடுவதில் வல்லவர் எவரும் இல்லை. இவர் பலபேரை பரலோகம் அணுப்பிவிட்டு எல் இன்டியோ என்பவனை தேடி எல் பாஸியோ என்ற சிறு நகரத்திற்கு வருகிறார். தன் சம்பாதித்த பணத்தை எல்லாம் அந்த ஊரில் உள்ள பாங்கில் போடுகிறார். பாங்கின் பாதுகாப்பை உறுதிபடுத்த அதன் பெட்டகத்தை பற்றி மேனேஜரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார்.

இந்த எல் இன்டியோ என்பவன் படு பயங்கர சைக்கோ வில்லன். சமீபத்தில்தான் ஜெயிலையே தரைமட்டமாக்கிவிட்டு தப்பி வந்தவன். இவனுக்கும் இவன் கூட்டத்தாருக்கும் அரசாங்கம் வைத்திருக்கும் விலை இருபதாயிரம் டாலர்.

இந்த சூழ்நிலையில்தான் மழையில் நணைந்துகொண்டு தனது குதிரையை பிடித்துக்கொண்டு நடந்துவரும் ஒரு நெடிய உருவம் நமக்கு காட்டப்படும். சிகரெட்டை வாயில் வைத்து தீக்குச்சியை தனது தொடையில் உரசி பற்றவைத்துக்கொண்டே மெதுவாக நிமிரும் அந்த உருவம் , பெயரே இல்லாத நம்ம நாயகன்தான். அவனும் ஒரு வெகுமதி வேட்டையன். வில்லனை பிடிக்கவே அங்கு வந்திருக்கிறான். ஒரு நாள் பேங்கை கொள்ளையடிக்க எல் இன்டியோவின் ஆட்கள் வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்து அவர்களின் கூட்டத்தில் சேர்ந்துகொள்கிறான் நாயகன். கொள்ளையடித்த பெட்டகத்தை திறந்து தருவதன்மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுகிறார் டக்லஸ். இந்த இருவரில் யார் வில்லனை பிடிக்கிறாங்க என்பதை நமக்கு செம விறுவிறுப்பாக சொல்வதுதான் டாலர்ஸ் ட்ரையாலஜியின் இரண்டாவது படமாக 1965ல் வெளிவந்த இந்த ஃபார் எ ஃபியூ டாலர்ஸ் மோர் திரைப்படமாகும்.

இந்த டாலர்ஸ் ட்ரையாலஜி படங்களின் தீம் மியூசிக்க ஒரே ஒரு முறை கேட்டுவிட்டால் அதன் பின்னர் உங்களால அத மறக்கவே முடியாது. அதான் என்னியோ மார்கோனி. எம்ஜியார் காலத்தில் எடுக்கப்பட்ட படம் இன்னைக்கும் நமக்கு பிடிக்குதுனா அந்த படத்தை பற்றி என்ன சொல்றது?..

0 Comments:

Post a Comment