Monday, July 15, 2013

நூலகம்-2

நாவல்களைப்போல் பெருத்தும் சிறுகதைகள் போல் சிறுத்தும் இல்லாமல் இவை இரண்டிற்குமிடையில் கட்டுரை வடிவில் சுவைபட கதைசொல்வதில் கைதேர்ந்த எழுத்தாளர் கார்டூனிஸ்ட் மதன்.இவரின் வந்தார்கள் வென்றார்கள் அணைவரும் அறிந்ததே, அதனால் இவரின் மற்ற நூல்களைபற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.

மனிதனும் மர்மங்களும்

அந்த பிரபல மனோதத்துவ மருத்துவர் தனது வழக்கமான நோயாளியை காண அந்த மருத்துவமணை வராண்டாவில் நடந்து கொண்டிருந்தார். எதிரில் வந்த ஒரு நர்ஸ் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு மறைந்துவிட்டார்(?!). இத்தனை வருடங்களில் அந்த நர்ஸை பார்த்திராத மருத்துவர் அவரைபற்றி விசாரித்தார். பல வருடங்களுக்கு முன்பே அந்த நர்ஸ் மருத்துவமனையில் தூக்கில் தொங்கிய உண்மை அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. அப்புடினா அவர் பார்த்த அந்த அது? அதுவேதான்!
இதுபோன்ற பேய்கதைகளை சற்று பயந்துகொண்டே படிப்பது எனக்கு பிடித்தவிசயங்களில் ஒன்று. இதைப்போலவே பல 'பிரபல' பேய்கதைகள் இந்த புக்கில் உண்டு.

மனிதன் மல்லாக்க படுத்து வானத்தை பார்க்க ஆரம்பித்த அன்றுமுதல் இன்றுவரை தொடரும் ஒரு தொடர்கதை ஏலியன்.  ஹாலிவுட்டில் பொழப்பு ஓடுவதே இந்த பயபுள்ளைகளாலதான். பறக்கும் தட்டு முதல் பட்டர்ஃபிளை வரை வானத்தில் பார்த்தவர்கள் அனேகம்பேர் அமெரிக்காவில் இன்றும் உள்ளனர். ஏலியனை பேட்டி எடுத்தவர் ஏலியனுடன் சம்பந்தம் பேசியவர்னு இந்த புக்ல நிரையபேர் இருக்காங்க ஜாக்கிரதை.

ஒரு பொருளை கண்ணால்பார்த்தே நகர்த்தவோ வலைக்கவோ பறக்கவோ வைக்க முடியுமா? அப்படியும் ஒருவர் இருந்தார். அவர் பெயர் யூரி கெல்லர். இவரை பல மருத்துவர்கள் சோதனைசெய்து பார்த்ததில் அசந்துபோன ஒரு விசயம் இவர் தனது உயரத்தை கூட்டியும் குறைத்தும் காண்பித்ததுதான். இந்த வகையராக்களும் இதில் உண்டு.

என்னதான் மனிதன்  கிளிஜோசியத்திலிருந்து கம்ப்யூட்டர் ஜோசியத்திற்கு பரிணாமவளர்ச்சி அடைந்திருந்தாலும் இவை அணைத்தும் எதிர்காலத்தை தெரிந்துகொள்ளும் ஆசையையே காட்டுகிறது. பலநூரு ஆண்டுகள் கழித்து நடக்கப்போவதை முன்னரே எழுதிவைத்த மனிதர்களும் தன் மரணத்தை முன்பே தெரிந்துகொண்ட ஆப்ரஹாம் லிங்கனும் மற்றொறு அதிசய சிறுமியும் இந்நூலில் வருகின்றனர். முடிந்தால் அவர்களிடம் உங்கள் எதிர்காலத்தை கேட்டுபாருங்க. மொத்தத்தில் இதுஒரு ரகளையான கலவையான புக்

0 Comments:

Post a Comment