Friday, June 13, 2014

இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?

மிஸ்டரி எனப்படும் மர்மமான விசயங்களை பற்றி படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. இதுபோன்ற படங்களையே நான் அதிகம் பார்த்துள்ளேன். அதில் ஒருவகையான ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளைப்பற்றிய புத்தகம்தான் ராஜ்சிவா எழுதிய இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?.
இதில் உள்ள சில விசயங்களைப்பற்றி ஏற்கனவே சுஜாதாவும் மதனும் எழுதிவிட்டாலும் ராஜ்சிவா அளவுக்கு யாரும் டீடெய்லா எழுதவில்லை அதனாலேயே இந்த புத்தகம் எனக்கு பிடித்தும்விட்டது.
இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்..
* இதுவரை உலகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பயிர் வட்டங்கள் உருவாகி இருக்கின்றன.  அவற்றை உருவாக்குவது யார்? எப்படி? எதற்கு?
* பறக்கும் தட்டை பார்த்தவர்களின் சாட்சியம் மற்றும் புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்.
* பயிர்வட்டங்களின் மூலம் ஏலியன்கள் மனிதர்களுக்கு அனுப்பிய செய்தி என்ன?
*  2 மற்றும் 3 பரிமாணங்கள் தெரியும். நான்காவதாக காலத்தையும் சேர்த்து 4D தொழில்நுட்பத்தில் செய்யப்படும் டைம் ட்ராவல் சாத்தியமா?
* 11 பரிமாணங்கள் இருப்பதாக சொல்லப்படும் ஒரு தியரி.
* ஏலியன்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர்.
*  ரோஸ்வெல் நகரில் விபத்துக்குள்ளான பறங்கும் தட்டையும் அதில் இருந்த ஏலியனையும் மறைக்கும் அமெரிக்கா.
* பிரமிடுக்கும் ஏலியனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
* ஏலியன்கள் இருக்கா? இல்லையா? அவை பூமிக்கு வந்தது உண்மையா?
* ஏலியன்கள் என நாம் நம்புவது டைம் மெஷினில் வருகைபுரியும் நமது வருங்கல சந்ததியினரா?
* நம்மை படைத்தது ஏலியன்களா?
இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள் இந்த புத்தகத்தில் உள்ளது. உயிர்மை இணைய இதழில் தொடர் கட்டுரையாக வந்ததை தொகுத்து உயிர்மை பதிப்பகத்தார் ரூபாய் 175க்கு வெளியிட்டுள்ளனர். சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத புத்தகம் இது.
             

0 Comments:

Post a Comment